இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

விரைவில் நடைபெற உள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாசா
சஜித் பிரேமதாசா

கொழும்பு: விரைவில் நடைபெற உள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருகிற 16-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  பிரேமதாசாவுக்கு முழு  ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், 'தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும்,  நான்கு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அங்கு வெளியான கருத்துக்கணிப்புகளில் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com