இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலோரத்தில் அமைந்துள்ள டொ்நேட் நகருக்கு 140 கி.மீ. தொலைவில், 45 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், சுனாமி உருவாவதற்கான அபாயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.