இராக்கில் போராட்டக்காரர்கள் மத்தியில் குண்டு வெடிப்பு: 6 பேர் சாவு

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 
இராக்கில் போராட்டக்காரர்கள் மத்தியில் குண்டு வெடிப்பு: 6 பேர் சாவு

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பாக்தாத்தில் உள்ள அல்-தையரன் சதுக்கத்தின் அருகே வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com