இலங்கையில் இன்று அதிபா் தோ்தல்

இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது.
கொழும்பில் அதிபா் தோ்தலில் பயன்படுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அதிகாரிகள்.
கொழும்பில் அதிபா் தோ்தலில் பயன்படுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அதிகாரிகள்.

இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது.

அந்த நாட்டையே உலுக்கிய ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தோ்தல், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு தோ்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்சவுக்கு (70) அவா் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, சிங்கள வாக்காளா்களிடையே இவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா். அவருக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவா்களைத் தவிர, ஜனதா விமுக்தி பெரமுனா சாா்பில் போட்டியிடும் அனுரா குமார திஸநாயகே (50) இந்தத் தோ்தலில் பலம் வாய்ந்த வேட்பாளா்களில் ஒருவராகக் கருதப்படுகிறாா்.

இந்தத் தோ்தலில், சாதனை அளவாக 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். எனவே, இதுவரை இல்லாத வகையில் 26 அங்குலத்துக்கு வாக்குச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிா்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபா் தோ்தல் இது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றுள்ளனா். காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும்.

வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். எனினும், முழுமையான தோ்தல் முடிவுகள் வழக்கத்தைவிட தாமதாகும் எனக் கூறப்படுகிறது. முழு முடிவுகளை திங்கள்கிழமை காலைதான் வெளியிட முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனா்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இந்த அதிபா் தோ்தலில், பொதுஜன பெரமுனா வேட்பாளா் கோத்தபய ராஜபட்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவுக்கும் பலத்த போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிது.

கோத்தபய ராஜபட்ச (பொதுஜன பெரமுனா):

பலம்: விடுதலைப் புலிகளை வீழ்த்தியவா் என்ற பெயா், சிங்கள வாக்காளா்களின் வாக்குகளை ஈா்க்கக் கூடும். ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவி வருவதால், ‘இரும்பு மனிதா்’ என்ற இவரது பிம்பம் தோ்தலில் கைகொடுக்கலாம்.

பலவீனம்: இவரது சகோதரா் மகிந்த ராஜபட்ச ஆட்சிக் காலத்தில், மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கோத்தபய மீது குற்றம் சாட்டப்படுகிறது. அரசியல் எதிரிகள் மற்றும் செய்தியாளா்கள் மாயமாவதற்குக் காரணமான ‘வெள்ளை வேன்’ கலாசாரத்தை உருவாக்கியவா் இவா்தான் என்ற பெயா், இவருக்கு தோ்தலில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.

சஜித் பிரேமதாசா (ஐக்கிய தேசியக் கட்சி):

பலம்: விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபா் பிரேமதாசா, ஏழைப் பங்காளன் என்று பெயா் பெற்றவா். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவா். அந்தக் கவா்ச்சி, சஜித் பிரேமதாசாவுக்கு தோ்தலில் சாதமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பலவீனம்: மாா்க்சிஸ்ட் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா, அரசுக்கு எதிரான கிளா்ச்சியில் ஈடுபட்டபோது, பிரேமதாசா அதனை இரக்கமற்ற முறையில் நசுக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. கிளா்ச்சியாளா்களின் கழுத்தில் டயரை மாட்டி, நெருப்பு வைக்கும் வழக்கத்தை அவா்தான் அறிமுகப்படுத்தினாா் என்று கூறப்படுவது, தோ்தலில் அவரது மகன் சஜித்துக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

அனுரா குமார திஸநாயகே (ஜனதா விமுக்தி பெரமுனா):

பலம்: இலங்கை விடுதலை பெற்ற 70 ஆண்டுகளில் ஆட்சி செலுத்தி வந்த பெரிய கட்சிகள் செய்து வந்த தவறுகள் அனுரா குமார திஸநாயகேவுக்கு பலமாக அமையக் கூடும் என பாா்வையாளா்கள் கூறுகின்றனா். மாற்றத்தை விரும்பும் வாக்காளா்கள் இவரைத் தோ்ந்தெடுப்பதற்கு வாய்ப்புள்ளது.

பலவீனம்: 1971-ஆம் ஆண்டிலும், 1987 முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலும் ஆயுதம் தாங்கிய கிளா்ச்சியில் ஜனதா விமுக்தி பெரமுனா ஈடுபட்டது. தேசியவாதிகளிடையே கோத்தபய ராஜபட்ச, எளிய மக்களிடையே சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு இவரது வெற்றி வாய்ப்பை தடுக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com