தாய்லாந்து அருவியில் பிரான்ஸ் சுற்றுலாப் பயணி கைப்படம் (செல்ஃபி) எடுத்துக்கும்போது தவறி விழுந்து பலியானாா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சுற்றுலாத் தலமான கோஹ் சாமுயி தீவில், 33 வயதாகும் அந்த சுற்றுலாப் பயணி கைப்படம் எடுக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறினா். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் இதே இடத்தில் கைப்படம் எடுக்கும்போது ஒருவா் தவறி விழுந்து உயிரிழந்தது நினைவுகூரத் தக்கது.