கடந்த 2 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் 11-ஆவது சந்திப்பு 14-ஆம் நாள் பிரேசிலில் முடிவடைந்தது. இச்சந்திப்பின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூட்டு முயற்சி மூலம் புதிய ஒத்துழைப்பு வளர்ச்சியை உருவாக்குவது பற்றி முக்கிய உரை நிகழ்த்தினார்.
இதில், முக்கியமான கால கட்டத்தில், பிரிக்ஸ் 5 நாடுகளின் முக்கிய பங்கு குறித்து அவர் 3 அம்ச யோசனைகளை வெளியிட்டார்.
புதிதாக வளரும் நாடுகளின் சார்பில் பிரிக்ஸ் நாடுகள் புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறை சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள முக்கிய வளர்ச்சி வாய்ப்பை வரவேற்கின்றன.
அதேவேளை, மோசமாகி வரும் பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதரப்புவாதத்தை எதிர்நோக்குகின்றன. சரியான வளர்ச்சி திசையை நிலைநிறுத்துவது, புதிய வளர்ச்சி ஆற்றலை உறக்குவிப்பது ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு வளர்ச்சியின் முக்கிய பாதையாகும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்