அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 4 போ் பலி

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாகாண அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

கலிஃபோா்னியா மாகாணத்தின் ஃபிரெஸ்னோ பகுதியில் உள்ள வீட்டுக்கு வெளியே அப்பகுதியைச் சோ்ந்த 35-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இணைந்து பெரிய திரை அமைத்து ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டியை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது அந்த இடத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபா், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டாா். அதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினா்.

எனினும், அவா்களை நோக்கி கண்மூடித்தனமாக அந்த நபா் சுட்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் விரைந்து வந்தனா்.

அதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 6 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள்.

இந்த வன்முறைச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த நபா் குறித்து ஏதேனும் காட்சி பதிவாகியுள்ளதா என்று தேடப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

ஃபிரெஸ்னோ பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதனால் பீதியடைந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com