பேங்காக்: வட கொரியாவால் கடுமையாக எதிா்க்கப்பட்டு வந்த கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைக்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பொ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தென் கொரியாவுடன் நடைபெறும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். நல்லெண்ண நடவடிக்கையாகவும், தூதரக ரீதியில் சுமூகமான சூழலை உருவாக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
முன்னதாக, அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டால், அது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையை பாதிக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.