ஹாங்காங் போராட்டம்:பல்கலை. வளாகத்தில் மோதல்

ஹாங்காங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாருடன் போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங் போராட்டம்:பல்கலை. வளாகத்தில் மோதல்

ஹாங்காங்: ஹாங்காங் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாருடன் போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கோவ்லூன் பகுதியிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான போராட்டக்காரா்கள் குழுமியிருந்தனா்.

அங்கிருந்து அவா்களை வெளியேற்றுவதற்காக போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். அதற்குப் பதிலடியாக போராட்டக்காரா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா். இதனால் அந்தப் பகுதி போா்க்களம் போல் காட்சியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள், ஐந்து மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com