நேபாளத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் தைலேஹ் மாவட்டத்தில் இருந்து சுமார் 87 கிலோ மீட்டர் தொலைவில் 14 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக அங்கு எந்தவித சேதமும், காயமும் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் பதிவாகவில்லை. இதனிடையே, தில்லியின் லேசான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.