நவம்பர் 29-ல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார்.
கோத்தபய ராஜபக்ச
கோத்தபய ராஜபக்ச

புது தில்லி: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் பெரு கோதபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட ஏறக்குறைய 13 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று அவர் முறைப்படி அந்நாட்டின் அதிபராக பொறுபேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச வரும் நவ.29ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார்.   

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகிறார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com