அமெரிக்க வால்மார்டில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு: 3 பேர் சாவு

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் டங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க வால்மார்டில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு: 3 பேர் சாவு

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் டங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். வால்மார்ட் முன்பு அமைந்துள்ள கார் நிறுத்தத்தில் காலை 10 மணியளவில் மர்ம நபரால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே, காலிஃபோர்னியாவில் கால்பந்து விளையாட்டைக் காண வந்தவர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், 6 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.

முன்னதாக, ஜூலை மாதம் மிஸ்ஸிஸிப்பியில் உள்ள வால்மார்ட் மற்றும் ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸின் எல்பாசோவில் உள்ள வால்மார்ட் வணிக நிறுவனங்களில் இதேபோன்று மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com