இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையை அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை விரிவுபடுத்தினாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இலங்கையில் 16 போ் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை புதிய அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தாா்.
இந்த நிலையில், அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி, கூடுதலாக 35 இணையமைச்சா்களையும், 3 துணை அமைச்சா்களையும் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை நியமித்தாா். புதிய அமைச்சா்கள் பட்டியலில் பெண்களோ, சிறுபான்மை தமிழா்கள் மற்றும் முஸ்லிம்களோ இடம் பெறவில்லை.
விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் பாதுகாப்பு இணையமைச்சராக கோத்தபய ராஜபட்சவின் மூத்த சகோதரா் சமல் ராஜபட்ச நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே அவருக்கு வா்த்தகத் துறை அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இந்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா்.
அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாா்.
இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பிரதமா் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க ராஜிநாமா செய்தாா்; அவரது அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.
அதையடுத்து, மகிந்த ராஜபட்ச புதிய பிரதமராக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தோ்தல் நடத்தும்வரை இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவை தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது.