பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் பற்றிய நினைவு கூட்டம் ஐ.நா.வில் நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில், பாலஸ்தீனப் பிரச்னை, மத்திய கிழக்குப் பிரச்னையின் மையமாகும். பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் தீர்த்து, பாலஸ்தீன-இஸ்ரேலின் சமாதான சக வாழ்வையும் கூட்டு வளர்ச்சியையும் நனவாக்குவது, சர்வதேசச் சமூகத்தின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது. பாலஸ்தீன-இஸ்ரேலின் அமைதியைச் சீனா ஆதரித்து வருகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்