ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: இராக்கில் 28 பேர் பலி

இராக்கில் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டத்தில் 28 பேர் உயிரிழந்தனர். 
பாக்தாதில் ஊரடங்கு உத்தரவைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
பாக்தாதில் ஊரடங்கு உத்தரவைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

இராக்கில் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டத்தில் 28 பேர் உயிரிழந்தனர். 
இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
இராக்கில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஏராளமானவர்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால் தலைநகர் பாக்தாத் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், அந்த உத்தரவைப் புறக்கணித்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களின்போது இதுவரை ஒரு காவல்துறை அதிகாரி உள்பட 28 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com