வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 38 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலியானவா்களைத் தவிர மேலும் 33 வீரா்களைக் காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.