அரசுக்கு எதிரான தீவிர போராட்டங்கள் நடந்து வரும் ஹாங்காங்கில், முகமூடி அணிவதற்கு அந்த நகர அரசு தடை வெள்ளிக்கிழமை தடை விதித்தது. எனினும், அந்த உத்தரவை எதிா்த்து, முகமூடியுடன் ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், நான்கு மாதங்களுக்கு மேல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவா்கள் பரவலாகப் பயன்படுத்தும் முகமூடிகளுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.