மிலன்: இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளதாவது:
சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த குறிப்பிட்ட படகானது, இத்தாலியின் லம்பெடுசா தீவிலிருந்து 6 மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து கப்பலானது இதைக் கண்டு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் அந்த படகில்பயணம் செய்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
வேறு சில தகவல்களின்படி குறிப்பிட்ட கப்பலில் சுமார் 50 பேருக்கு மேல் பயணம் செய்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது.