அபு தாபி விமான நிலையத்தைக் கலக்கிய இந்திய முதியவர்: வயது ஜஸ்ட் 124 தான்!

ஒவ்வொரு பயணியின் பாஸ்போர்ட்டையும் பரிசோதித்து முத்திரைக் குத்தி அனுப்பும் பணியை செய்து வரும் அபுதாபி விமான நிலைய ஊழியர்கள் பலரும், இவரது பாஸ்போர்ட்டை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
அபு தாபி விமான நிலையதில் சுவாமி சிவானந்தா
அபு தாபி விமான நிலையதில் சுவாமி சிவானந்தா


துபை: ஒவ்வொரு பயணியின் பாஸ்போர்ட்டையும் பரிசோதித்து முத்திரைக் குத்தி அனுப்பும் பணியை செய்து வரும் அபுதாபி விமான நிலைய ஊழியர்கள் பலரும், இவரது பாஸ்போர்ட்டை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், அந்த பாஸ்போர்ட்டைக் கொண்டு வந்த இந்திய முதியவரின் பிறந்த ஆண்டுதான். சுவாமி சிவானந்தா எனும் இந்திய முதியவர், ஆகஸ்ட் 8ம் தேதி 1896ம் ஆண்டு பிறந்தவர் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு வயது 124.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1896ம் ஆண்டு பிறந்துள்ளார் சுவாமி சிவானந்தா. அவரது பாஸ்போர்ட்டுடன், விமான நிலைய ஊழியர்களும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com