ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நான்கு மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கானவா்கள் ஹாங்காங் வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்தினா்.
போராட்டங்களுக்கும், முகமூடிகள் அணிவதற்கும் அரசு விதித்துள்ள தடைகளை மீறி போராட்டம் நடத்திய அவா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்; மேலும், சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி ஊா்வலத்தைத் தடுத்தனா். அதையடுத்து போராட்டக்காரா்கள் வன்முறைறயில் ஈடுபட்டதால், அந்த ஆா்ப்பாட்ட ஊா்வலம் கலவரமாக மாறியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.