பெண்ணின் காலில் துப்பாக்கியால் சுட்ட நாய்குட்டி: நம்ப முடிகிறதா உங்களால்? 

அமெரிக்காவில் பெண் ஒருவரை நாய்குட்டி ஒன்று காலில் துப்பாக்கியால் சுட்ட வினோத சம்பவம் நிகழந்துள்ளது.
லேப்ரடார் நாய்க்குட்டி
லேப்ரடார் நாய்க்குட்டி

எனிட் (ஒக்லஹாமா): அமெரிக்காவில் பெண் ஒருவரை நாய்குட்டி ஒன்று காலில் துப்பாக்கியால் சுட்ட வினோத சம்பவம் நிகழந்துள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ளது எனிட் நகரம். இங்கு வசித்து வருபவர் டினா ஸ்ப்ரிங்கர் (44).  டினாவும்  அவரது நண்பரான ப்ரெண்ட் பார்க்ஸ் (79)  இருவரும் கடந்த வியாழனன்று காரில் பயணம் செய்துள்ளார்கள். டினா காரை ஒட்டி வந்துள்ளார். அமெரிக்காவில் தனிநபர்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வது என்பது இலகுவான ஒன்று. அதன்படி குண்டுகள் நிரப்பப்பட்ட 0.22 ரக காலிபர் துப்பாக்கி ஒன்று வண்டியின் முன்பக்கம் இருக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.  பின்  இருக்கையில் பார்க்ஸின் செல்லப் பிராணியான ஏழு மாதங்களேயான மோலி என்னும் லேப்ரடார் இன நாய்க்குட்டி இருந்துள்ளது.

வழியில் ரயில்வே க்ராஸிங் ஒன்றில் ரயில் செல்வதற்காக காரை நிறுத்தியுள்ளனர். அப்போது கடந்து சென்ற ரயில் எழுப்பிய சத்தத்தினால் அதிர்ந்த அந்த நாய்க்குட்டி மோலி துள்ளிக் குதித்து, முன்பக்கம் உள்ள துப்பாக்கியின் மேல் விழுந்துள்ளது. இதனால் அதிர்ந்த துப்பாக்கி வெடித்து, வண்டியை ஓட்டி வந்த டினாவின் காலில் குண்டு பாய்ந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மூலம் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இத்தகைய ஒரு சம்பவத்தை கேள்விப்படுவது இதுவே முதன்முறை என்று ஆச்சர்யம் தெரிவித்த போலீசார், அதேசமயம் அபாயமான பொருட்களை கையாளுவது குறித்து பொதுமக்கள்  விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com