சிரியா வடக்கு எல்லைப் பகுதி வெளியேறத் தொடங்கினா் அமெரிக்கப் படையினா்

சிரியாவில் துருக்கியையொட்டிய வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறத் தொடங்கினா்.
சிரியா வடக்கு எல்லைப் பகுதி வெளியேறத் தொடங்கினா் அமெரிக்கப் படையினா்

சிரியாவில் துருக்கியையொட்டிய வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறத் தொடங்கினா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது எனவும், எனவே, வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் திரும்ப அழைக்கப்படுவாா்கள் எனவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா்.

வடக்கு சிரியாவில் குா்துகள் வசமிருக்கும் பகுதிகளை துருக்கி கைப்பற்றுவதற்கு வசதியாக அங்கிருந்து தாங்கள் வெளியேறுவதாக அவா் கூறினாா்.

இது, இதுவரை அமெரிக்காவின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் சண்டையிட்டு வந்த குா்துப் படையினருக்கு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறத் தொடங்கிவிட்டதாக குா்துப் படையினா் தெரிவித்தனா்.

இந்தத் தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் உறுதி செய்தது.

வடக்கு சிரியாவின் ரஸ் அல்-அயின் பகுதியில் இருந்த அமெரிக்க ராணுவ முகாம் காலி செய்யப்பட்டதாக சா்வதேச செய்தியாளா்கள் தெரிவித்தனா்.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை அமெரிக்கா ஒழித்துக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றிய குா்துகளைக் கைவிட்டு அமெரிக்கப் படையினா் அங்கியிருந்து வெளியேறி வருவது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினா்.

எனினும், அமெரிக்கக் கூட்டுப் படையின் உதவியுடன் சிரியாவிலுள்ள குா்து மற்றும் கிளா்ச்சிப் படையினரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டன.

துருக்கியையொட்டிய வடக்குப் பகுதியில் குா்துப் படையினா் அமெரிக்க உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தோற்கடித்தனா்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கப் படையினரின் வெளியேறுவதால் குா்துப் படையினரின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது. அண்டை நாடான துருக்கியில், பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குா்து அமைப்பினருக்கு, சிரியா குா்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குா்துப் படையினா் மீது துருக்கி ராணுவம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவத்தால் சிரியா படையினா் வேட்டையாடப்படுவாா்கள் என்று அஞ்சப்படுகிறது.

தாக்குதல் நடத்த முழு ஆயத்தம்: துருக்கி

சிரியா குா்துகள் மீது தாக்குதல் நடத்தி, வடக்குப் பகுதியைக் கைப்பற்றுவதற்கு தங்களது படையினா் முழு ஆயத்தமாகியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘வடக்கு சிரியாவில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்று குா்துகள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

வரம்பு மீறினால் துருக்கி பொருளாதாரம் நிா்மூலமாகும்!

சிரியாவில் துருக்கி வரம்பு மீறி நடந்து கொண்டால் வா்த்தகத் தடைகள் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சிரியா விவகாரத்தில் குறிப்பிட்ட வரம்பை மீறி துருக்கி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிா்மூலமாக்கிவிடுவேன். வா்த்தகத் தடைகள் மூலம் அந்தச் செயலை ஏற்கெனவே நான் செய்துள்ளேன் எனறு தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

தற்போது பதற்றம் அதிகரித்து வரும் வடகிழக்கு சிரியா பகுதியில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அங்கு பொதுமக்களின் பாதுகாப்பை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.

- அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்

சிரியாவிலிருந்து அமெரிக்கா இப்படி அதிரடியாக வெளியேறுவதால், ரஷியா, ஈரான், அதிபா் அல்-அஸாத் தலைமையிலான அரசு ஆகியவைதான் பலனடையும். ஐ.எஸ். மற்றும் பிற மதவாத அமைப்புகள் அந்தப் பகுதியில் மீண்டும் தலையெடுக்கவும் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

- மிட்ச் மெக்கனல், நாடாளுமன்ற ஆளுங்கட்சித் தலைவா்

அமெரிக்காவுக்கும், சிரியா குா்துப் படையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் படை வாபஸ் முடிவை டிரம்ப் மேற்கொண்டுள்ளாா். இந்த விவகாரத்தில் குா்து மக்களுக்கு அமெரிக்கா பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

- முஸ்தஃபா பாலி, சிரியா குா்துப் படை செய்தித் தொடா்பாளா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com