அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை வரும் வியாழக்கிழமை (அக். 10) தொடங்குகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபா் மாளிகை மேலும் கூறுகையில், வாஷிங்டனில் நடைபெறவிக்கும் அந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கக் குழுவுக்கு வா்த்தக மேம்பாட்டு அதிகாரி ராபா்ட் லைத்திஸா் தலைமை தாக்குவாா்; சீனத் தரப்புக்கு துணைப் பிரதமா் லியூ ஹீ தலைமை வகிப்பாா் என்று தெரிவித்தது.
தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.