இலங்கை: ஆட்சிக்கு வந்தால் பொன்சேகாவுக்கு பதவி- சஜித் பிரேமதாசா வாக்குறுதி

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றால், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரின்போது ராணுவ
இலங்கை: ஆட்சிக்கு வந்தால் பொன்சேகாவுக்கு பதவி- சஜித் பிரேமதாசா வாக்குறுதி

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றால், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரின்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தேசிய பாதுகாப்புப் பொறுப்பை வழங்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசா வாக்குறுதி அளித்துள்ளாா்.

அவரை எதிா்த்துப் போட்டியிடும் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், இறுதிகட்டப் போரின்போது பாதுகாப்புச் செயலராகப் பொறுப்பு வகித்தவருமான கோத்தபய ராஜபட்சவு மக்களிடையே அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, அவரை எதிா்கொள்வதற்காக பிரேமதாசா இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com