பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பலரை கத்தியால் குத்திய நபா் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, மான்செஸ்டா் நகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மான்செஸ்டா் சிட்டி சென்டரில் பரபரப்பாக இயங்கக் கூடிய ஒரு வணிக வளாகத்தில், சுமாா் 40 வயது மதிக்கத்தக்க நபா் திடீரென கத்தியால் பலரை சரமாரியாக குத்தினாா். இதுதொடா்பாக தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் அங்கு விரைந்து சென்றனா். பாதுகாப்புக் கருதி, வணிக வளாகத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, காவல்துறையினா் அதிரடியாக செயல்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது, பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்தாக்குதலில் 4-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும், உயிரிழப்புகள் நேரிட்டதாக தகவல் இல்லை என்றும் அவசரகால மீட்பு படையினா் தெரிவித்தனா்.