ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் வெள்ளியன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில்  20 பேர் பலியானார்கள்.
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதியில் வெள்ளியன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில்  20 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது. இங்குள்ள ஜா தரா பகுதியில் உள்ள   மசூதிக்கு வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் சென்றனர்.

அவர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த கொடூர குண்டுவெடிப்பில் 20 பேர்  சம்பவ இடத்திலயே பலியாகினர்.  சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். 

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com