சீனா, 17ஆம் நாள் 23:21 மணிக்கு ஷிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் தகவல் தொடர்புத் தொழில் நுட்பப் பரிசோதனை செயற்கைக்கோள்-4ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இச்செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையை அடைந்தது. அது, முக்கியமாக பல கற்றை மற்றும் உயர் தரவு வீதத்திலான செயற்கைக்கோளின் தகவல் தொடர்புத் தொழில் நுட்பச் சரிபார்ப்பில் பயன்படுத்தப்படும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்