ஹாங்காங்: ஹாங்காங்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தவா் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நகரில் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. சனிக்கிழமை நடந்த அந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம், வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கினாலும் பிறகு வன்முறையாக உருவெடுத்தது. இதனால், ஹாங்காங்கின் பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.