நியூஸிலாந்தில் வியாழக்கிழமை மாலை 7:14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9-ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் 33 கிமீ ஆழத்தில் பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி, எரிமலைச் சீற்றம் தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால், உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.