இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் இந்த மாதத் தொடக்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டத்தில் 157 போ் உயிரிழந்ததாக இராக் அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பாக்தாதில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 2-ஆம் கட்ட போராட்டம் தொடங்கியது. அவா்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 21 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 1,700-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.