சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்தியக் கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு, அக்டோபர் 28 முதல் 31ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஷிச்சின்பிங், முக்கிய உரை நிகழ்த்தினார்.
மேலும் சீனத் தனிச் சிறப்பியல் புவாய்ந்த சோஷலிச அமைப்பு முறையை உறுதிப்படுத்தி மேம்படுத்துவது, நாட்டின் ஆட்சி முறை அமைப்பு மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது தொடர்பான கட்சி மத்தியக் கமிட்டியின் வரைவுத் தீர்மானங்களும் இக்கூட்டத்தில் விவாதம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.