லாகூா்: பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 74 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிண்டியை நோக்கி தேஜ்காம் விரைவு ரயில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. ராய்விண்ட் நகரில் நடைபெறும் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்த ரயிலில் சென்றுகொண்டிருந்த சிலா், எரிவாயுவைப் பயன்படுத்தி காலை உணவு சமைத்துக் கொண்டிருந்தனா். அப்போது இரு எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின. இதில், ரயிலின் 3 பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
இந்த விபத்தில் 74 போ் உயிரிழந்தனா்; பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள், இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்கச் சென்றுகொண்டிருந்த மதபோதகா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.