சீனாவின் குய்சோ மாநிலத்தின் சாங்ஃபேங் கிராமத்தில் உள்ள சாங்தியான் எனும் பள்ளியில், 76 வயதான ஜியாங் யுவான்வூ என்ற ஆசிரியர் உள்ளார். தன்னுடைய 18-வது வயதில் ஆசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்து மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார்.
58 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட தன்னார்வத்துடன் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு