பஹாமாஸ்: டோரியன் புயலில்2,500 பேர் மாயம்

பஹாமாஸ்: டோரியன் புயலில்2,500 பேர் மாயம்

பஹாமாஸ் தீவில் வீசிய டோரியன் புயலுக்குப் பிறகு, அங்கு 2,500 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


பஹாமாஸ் தீவில் வீசிய டோரியன் புயலுக்குப் பிறகு, அங்கு 2,500 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டோரியன் புயலுக்குப் பிறகு, காணாமல் போனவர்கள் குறித்த அரசின் பதிவேட்டில் சுமார் 2,500 பேரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களில் பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கலாம். எனவே, பட்டியலை சரிபார்த்த பிறகே உண்மையில் காணாமல் போனவர்கள் குறித்த விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பஹாமாஸ் தீவை, கடந்த 1-ஆம் தேதி கடுமையாகத் தாக்கிய டோரியன் புயலில் 50 பேர் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com