மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்துக்கான(எம்ஏபி)2019 இளைஞர்கள் கருத்தரங்கு சீனாவின் ஜிலின் மாநிலத்தில் 15ஆம் தேதி துவங்கியது. 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 270 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் என்பது யுனெஸ்கோ அமைப்பால் 1971ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான திட்டமாகும். இது, மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை ஒருங்கிணைத்து, பல்வேறு துறைகள் தொடர்பாக ஒட்டுமொத்த ஆய்வை மேற்கொள்கின்றது. தவிரவும், கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கும் இது முக்கியத்துவம் அளிக்கின்றது.
2020ஆம் ஆண்டு, உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய ஒப்பந்தத்தை உருவாக்கிய நாடுகளின் 15ஆவது மாநாடு சீனாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.