கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போபாயன் எனும் நகரத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
பிஏ-31-350 ரக விமானம் லோபஸ் டி மிகே நோக்கிப் பயணமாகும் போது இந்த விபத்து நேரிட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.