பாகிஸ்தானில் மலை மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கில்ஜித்-பலிஸ்தான் பகுதியைச் சேர்ந்த ஸ்கார்டு நகரிலிருந்து ராவல்பிண்டியை நோக்கி 40 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, பாபுசார் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
மலைப் பாதை வளைவில் அந்தப் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்து அது மலை மீது மோதியது.
இதில், சிறுவர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.