நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கதார் அரசர் தமிம் பின் ஹமத் அல் தனி, ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டி, பூடான் பிரதமர் லோடாய் செரிங், கொலம்பிய அதிபர் இவன் மார்க்யூஸ், நைகர் அதிபர் முஹமது இஸோஃபூ, இத்தாலி பிரதமர் கைஸப்பீ கான்டே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முஹமது சோலி, நமீபிய அதிபர் ஹாகே கெயங்காப் ஆகியோருடன் இச்சந்திப்பு நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், யூனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரேவைச் சந்தித்து இந்தியாவில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.