பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலநடுக்கம் உயிரிழப்பு 23-ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்

இதன் எதிரொலியாக தில்லி பஞ்சாப் மற்றும் ஹரியாணா  முழுவதும் நடுக்கம் உணரப்பட்டது. 
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலநடுக்கம் உயிரிழப்பு 23-ஆக அதிகரிப்பு, 300 பேர் படுகாயம்

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை 4:31 மணியளவில் ஏற்பட்டது.

இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் எதிரொலியாக தில்லி பஞ்சாப் மற்றும் ஹரியாணா  முழுவதும் நடுக்கம் உணரப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com