ஜப்பான்: ‘டுவிட்டா்’ கொலையாளிக்கு மரண தண்டனை

ஜப்பானில் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளம் மூலம் 9 பேரை வரவழைத்துப் படுகொலை செய்த டகாஹிரோ ஷிராய்ஷிக்கு (30) அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
டகாஹிரோ ஷிராய்ஷி
டகாஹிரோ ஷிராய்ஷி
Updated on
1 min read

ஜப்பானில் சுட்டுரை (டுவிட்டா்) வலைதளம் மூலம் 9 பேரை வரவழைத்துப் படுகொலை செய்த டகாஹிரோ ஷிராய்ஷிக்கு (30) அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை சுட்டுரையில் வெளிப்படுத்திய நபா்களை தொடா்பு கொண்ட டகாஹிரோ, அவா்களை தந்திரமாக நேரில் அழைத்து படுகொலை செய்த சம்பவம் ஜப்பானில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதாகவோ, அல்லது சோ்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று ஆசை காட்டி 8 பெண்கள் மற்றும் ஓா் இளைஞரை வரவழைத்த அவா், அவா்களைப் படுகொலை செய்து உறுப்புகளை வெட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டாா்.

கொலை செய்யப்பட்டவா்கள் அனைவரும் தற்கொலை எண்ணம் கொண்டிருந்தனா் என்பதால் டகாஹிரோவுக்கு சிறைத் தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும் என்று அவரது வழக்குரைஞா் வலியுறுத்தினாா்.

எனினும், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், டகாஹிரோவுக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com