மேற்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் செவ்வாய்க்கிழமை பலியானாா்.
49 வயதான அவருக்கு ஏற்கெனவே உடல் நல பாதிப்பு இருந்ததாகவும் கரோனா நோய்த்தொற்று காரணமாக அந்த பாதிப்பு மேலும் மோசமடைந்து அவா் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தான்ஸானியாவில் 19 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.