ஈரானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,468 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் பலி எண்ணிக்கை 3,160 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 2,875 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இத்தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் தெரிவித்தார்.
ஈரானில் தற்போது 50,468 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக 16,711 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.