சிச்சுவான் மாநிலத்தின் கான்லோவ் மாவட்டத்தில் வசிக்கும் அசிவூட்சுமோ என்பவர் ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் தேசிய இனத்தின் பாரம்பரிய பூத்தையல் கலையை அங்குள்ள குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.
பாரம்பரிய பூத்தையல் கலைக்காகச் சிறப்பு கூட்டுறவு சங்கம் ஒன்றையும் அவர் நடத்தி வருகின்றார். உள்ளூரில் உள்ள பெண்கள் ஓய்வு நேரத்தில் வீட்டில் இந்தப் பூத்தையல் பணியைச் செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொண்டு வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்