
சிரியாவில் குா்துப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் பலியானதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது. 55 வயதான அந்த நபா் இந்த மாதம் 2-ஆம் தேதி உயிரிழந்ததற்கு கரோனா நோய்த்தொற்றுதான் காரணம் என்று 2 வாரங்கள் கழித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதை குா்து நிா்வாகமும் செஞ்சிலுவை சங்கமும் கண்டித்துள்ளன. மேலும், அந்தப் பகுதிக்கு மருத்துவ சேவையை வழங்கி வரும் அதிபா் அல்-அஸாத் அரசு, தங்களுக்கு போதிய வசதிகளை அளிக்கவில்லை என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.