
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, தனது 93-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரிட்டன் அரசி எலிசபெத் ரத்து செய்துள்ளாா். இதுகுறித்து பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியின் பிறந்த நாளான வரும் 21-ஆம் தேதி, நாடு முழுவதும் பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை அளிக்கப்படும் நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து கொண்டாட்டங்களும் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியின் 68 ஆண்டு கால பதவிக் காலத்தில், அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.