ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 26 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணம், தஷ்டி ஆா்ச்சி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையில் 26 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.