வங்கதேசத்தில் ஹரே ராமா இயக்கத்தினரின் மடத்தில் 31 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த மடம் அமைந்துள்ள கட்டடத்தை அதிகாரிகள் மூடி, போக்குவரத்தை முடக்கியுள்ளனா். அங்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 145 போ் பலியாகினா்.