அமெரிக்காவில் ஒரேநாளில் 47,508 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 515 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 47,508 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 46,65,002 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 515 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,54,834 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 23 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com