லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தன. முதற்கட்டமாக வெளியானத் தகவலின்படி, பெய்ரூட் துறைமுகப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுகின்றனர்.
குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி இன்னும் கண்டறியப்படவில்லை.