பாகிஸ்தானில் புதிதாக 432 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,80,461 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு 2,80,461 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 15 பேர் உள்பட இறப்பு எண்ணிக்கை 5,999 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,49,397 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,013 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,21,705, பஞ்சாப் - 93,336, கைபர்-பக்துன்க்வா- 34,253, இஸ்லாமாபாத் - 15,095, பலுசிஸ்தான்- 11,777, கில்கித்-பல்திஸ்தான்- 2,198 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10,690 மாதிரிகள் உள்பட இதுவரை 20,31,955 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.